/* */

அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு இழப்பீடு 30 லட்சம் வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

அரியலூரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலை விவசாயிகளிடமிருந்து கடந்த 30 ஆண்டு முன்பு சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்காக சிமெண்ட் ஆலையை சுற்றி உள்ள புதுப்பாளையம், பெரியநாகலூர், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, நெறிஞ்சிக்கொரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாய நிலங்களை கையகப்படுத்தியது.

இதற்கு சந்தை மதிப்பாக சிறிய அளவிலான தொகையே வழங்கப்பட்டது. இதனைக் கண்டித்து பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரியலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்தை 18 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு ஏக்கர் ஒன்றுக்கு 30 லட்சம் வழங்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். இல்லையென்றால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்பவும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 5 பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Jun 2022 9:05 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்