Begin typing your search above and press return to search.
மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பலி
கீழப்பழுவூர் கல்லூரி அருகில் வேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில் எலக்ட்ரீசியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் காரப்பாக்கம் கிராமத்தில் எலக்ட்ரீசியன் மணிகண்டன் வசித்து வந்துள்ளார். மணிகண்டன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கீழப்பழுவூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
கீழப்பழுவூர் கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் மணிகண்டன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.