/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1867 பேர். இதில் முதல் தடுப்பூசியை 1589 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா
X

மாதிரி படம்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 29 பேர். மருத்துமனைகளில் 279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 15,606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 15,097 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை 859 பேர். இதுவரை 2,47,040 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 15,606 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,31,434 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 10,493. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,18,073. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 32,335 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,654 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 30,536 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 145 பேர்.

கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1867 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 1589 பேர் போட்டுக்கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 278 பேர் போட்டுக்கொண்டுள்ளனர். நோய்பரவல் கட்டுப்பாட்டு மண்டலங்களாக ஊரகப்பகுதியில் 2 இடங்கள் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.




Updated On: 23 July 2021 3:02 PM GMT

Related News