அரியலூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழப்பு. இன்று 18 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர் . மருத்துமனைகளில் 150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,056 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 251 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 955 பேர். இதுவரை 2,93,098 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,457 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,76,641 பேர்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 11,977. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,82,989. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 37,736 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,811 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 35,833 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 112 பேர்.
இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 4393 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 3800 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 593 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.