/* */

ஆடு திருடிய வாலிபர் கைது

ஆடு திருடிய வாலிபர் கைது
X

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராயம்புரம் பகுதியில் கோவிந்தராசு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் கோவிந்தராசு தனது ஆடுகளை மேய்ப்பதற்கு அப்பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தில் வாலிபர் ஒருவர் ஒரு ஆட்டை திருடி சென்று விட்டார். இதனை அறியாத கோவிந்தராசு தனது ஆடுகளை வீட்டிற்கு ஓட்டிச் சென்ற போது ஒரு ஆடு மட்டும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அப்பகுதி முழுவதும் தேடியும் அது கிடைக்கவில்லை. இதனால் கோவிந்தராசு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து கோவிந்தராசு ஆடுகளை வாங்கி விற்பனை செய்பவரிடம் விசாரித்தால் ஏதாவது தகவல் கிடைக்கும் என்று நினைத்து விசாரித்துள்ளார். அப்போது ஆடு திருடி சென்ற வாலிபர் உச்சினி கிராமத்தில் வசிக்கும் ராமு என்பவரிடம் ஆட்டை விற்பனை செய்ததை அறிந்த கோவிந்தராசு, அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்களுடன் இணைந்து அங்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டை திருடி சென்ற வாலிபரை கோவிந்தராசும், இளைஞர்களும் இணைந்து கையும், களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் பொய்யாநல்லூர் பகுதியில் வசிக்கும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சரவணன் தொடர்ந்து இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், இவரின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Updated On: 20 Jun 2021 7:42 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  2. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  3. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  4. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  5. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  6. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...