பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி: மாணவர்கள் வருகை முக அங்கீகார பதிவு அறிமுகம்
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி மாணவர்கள் வருகை முக அங்கீகார பதிவு கைபேசி செயலியினை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தபொழுது அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையினை முக அங்கீகார முறையில் பதிவு செய்யும் கைபேசி செயலியினை உருவாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியிருந்தார்கள். அதன் அடிப்படையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையினை முக அங்கீகார முறையில் பதிவு செய்திடும் கைபேசி செயலியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இந்த முக அங்கீகார முறையில் பதிவு செய்திடும் கைபேசி செயலி மாவட்ட ஆட்சித்தலைவர் தன்விருப்ப நிதியிலிருந்து செயல்படுத்தப்படவுள்ளது. இதன் பயனாக பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையினை இனி முக அங்கீகார முறையிலேயே இந்த கைபேசி செயலி மூலம் பதிவு செய்யலாம். மேலும் அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 32 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையினை முக அங்கீகார முறையில் இச்செயலி மூலம் பதிவு செய்யலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.