அதிமுக வேட்பாளர் வாபஸ்: திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
உடையார்பாளையம் பேரூராட்சி 13வது வார்டில் அதிமுக வேட்பாளர் வாபஸ் பெற்றதையடுத்து திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 63 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் உடையார்பாளையம் பேரூராட்சியில் 13வது வார்டில் அதிமுக வேட்பாளர் அம்பிகா கண்ணன் மற்றும் திமுக வேட்பாளர் மலர்விழி ரஞ்சித் குமார் ஆகிய இருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் அம்பிகா கண்ணன் பிப்ரவரி 7 ஆம் தேதியான இன்று வாபஸ் பெற்றார்.
தையடுத்து, திமுக வேட்பாளர் மலர்விழி ரஞ்சித்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதற்கான ஆணையை பேரூராட்சி அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் திமுக சார்பில் முதல் வெற்றியைப் பெற்றுள்ள திமுக வேட்பாளருக்கு அக்கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.