அரியலூர் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணி- நாளை மின்தடை
அரியலூர் துணைமின் நிலைய மின்பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், 19.06.2021 அன்று மின்தடை செய்யப்படவுள்ளது.
HIGHLIGHTS
இது தொடர்பாக, அரியலூர் துணைமின் நிலைய உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும் & காத்தலும்) பொ.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரியலூர் துணை மின்நிலையத்தில் இருந்து 11kv ஆத்தூர் மின்பாதை வழியாக மின்சாரம் பெறும் அம்மாகுளம், தவுத்தாய்குளம், பாலம்பாடி, ஜெமீன்ஆத்தூர், பார்பனச்சேரி, வாரணவாசி, மல்லூர் ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது.
தேளுர் துணை மின்நிலையத்தில் இருந்து 11kv நாகமங்கலம் மின்பாதை வழியாக மின்சாரம் பெறும் ஒரத்தூர், நாகமங்கலம், உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், கீழநத்தம், குணமங்கலம், கடம்பூர், பு.ஆதனூர் ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது.
அரியலூர் துணை மின்நிலையத்தில் இருந்து 11kv அஸ்தினாபுரம் மின்பாதை வழியாக மின்சாரம் பெறும் ராஜீவ்நகர், வாலாஜாநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், சின்னநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், சிறுவளுர், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், சுப்ராயபுரம் ஆகிய பகுதிகளில் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலும் மின் விநியோகம் தடைபடும் என்று, அவர் தெரிவித்துள்ளார்.