288 ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது
அரியலூர் மாவட்ட 288 ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
HIGHLIGHTS
வடகிழக்கு பருவமழையின் மூலமாக அரியலூர் மாவட்டத்தில் சராசரி அளவை காட்டிலும் 6 சதவீதம் மழைப்பொழிவு கூடுதலாக மழை பெய்துள்ளது. கடந்த 01.10.2021 முதல் 613.38 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள 2477 ஏரி மற்றும் குளங்களில் 288 ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 90 சதவீதத்திற்கு மேல் 129 ஏரி, குளங்களும், 80 சதவீதத்திற்கு மேல் 532 ஏரி, குளங்களும், 70 சதவீதத்திற்கு மேல் 701 ஏரி, குளங்களும், 50 சதவீதத்திற்கு மேல் 616 ஏரி, குளங்களும், 25 சதவீதத்திற்கு மேல் 196 ஏரி, குளங்களும், 25 சதவீதத்திற்குள் 15 ஏரி, குளங்களும் நிரம்பியுள்ளன. முழு கொள்ளளவை எட்டியுள்ள நீர்நிலைகளில் மழைநீரினை பாதுகாப்பு கருதி உபரிநீர்வெளியேற்றப்பட்டு வருகிறது.
226.8 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சித்தமல்லி நீர்தேக்கத்தில் தற்பொழுது 211.05 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. தற்சமயம் வினாடிக்கு 256 கனஅடி நீர் நீர்தேக்கத்திற்கு வருகிறது.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரியில் 114.45 மில்லியன் கனஅடி கொள்ளளவில் தற்போதை வரை 94.50 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரிக்கு 73 கனஅடிநீர் நீர்தேக்கத்திற்கு வருகிறது.
இரண்டு ஏரிகளிலும் நீர் வெளியேற்றம் தற்சமயம் நிறுத்தப்பட்டுள்ளது. நீர் தேக்கத்திற்கு வருகை தரும் மழைநீரின் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீர்தேக்கத்திற்கு அதிகபடியான மழைநீர் வரும் பட்சத்தில் அதனை வெளியேற்றிடவும், பலவீனமான இடங்களில் மணல் மூட்டைகள் அடக்குவதற்காக மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன.
ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் அதிக நீர் இருப்பு மற்றும் வெளியேற்றம் உள்ளதால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள், ஆறுகள் மற்றும் ஏரிகள் மற்றும் குளங்கள் ஆகிய நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.