Begin typing your search above and press return to search.
அரியலூரில் 2 நாள் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்ட முகாம்
அரியலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட 1 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் அரியலூர் கோட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற கடந்த 01.04.2003 முதல் 31.03.2013 வரை விண்ணப்பம் பதிந்து தயார் நிலை பதிவு செய்ய அறிவிப்பு கடிதம் பெற்றுள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் தங்களின் நில புலஎண் மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்துடன் அரியலூர் இராஜாஜி நகரிலுள்ள மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் வருகின்ற 06.01.2022 மற்றும் 11.01.2022 தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.