/* */

இனிமேல், கள்ள ஓட்டு போட முடியாது: வாக்காளர் ஐ.டி.,யுடன் ஆதார் இணைக்க ஏற்பாடு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சட்ட திருத்தம் அமலானது. இதனால் இனிமேல் அரசியல் கட்சியினர் கள்ள ஓட்டு போடுவது நடக்காது.

HIGHLIGHTS

இனிமேல், கள்ள ஓட்டு போட முடியாது: வாக்காளர் ஐ.டி.,யுடன் ஆதார் இணைக்க ஏற்பாடு
X

வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு இறுதியில் சட்ட திருத்தம் நிறைவேற்றியது. இதன் மூலம் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளராக பதிவு செய்வது தடுக்கப்படும். கள்ள ஓட்டு போடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதுதவிர 18 வயது நிரம்பியவுடனே வாக்காளராக பதிவு செய்யும் வகையில் ஆண்டுக்கு 4 கட்-ஆப் தேதிகள் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் தேர்தல் சட்டத்தில் பாலின சமத்துவத்தை பேணும்வகையில் மனைவி என்ற வார்த்தை வாழ்க்கைத்துணை என குறிப்பிட்டு திருத்தப்படுகிறது. இதன் மூலம் தொலைதூர பகுதிகள், வெளிநாடுகளில் பணியாற்றும் ராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கைத்துணை வாக்களிக்க வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்ட திருத்தம் அமலில் வந்துள்ளது. இது தொடர்பாக 4 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளதாக கிரண் ரெஜிஜூ, தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 18 Jun 2022 8:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?