அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் இன்று அலைமோதியது. நீண்ட வரிசையின் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-12-19 14:02 GMT

அண்ணாமலையார் கோவிலில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள்

திருவண்ணாமலையில்  பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். தொடர்ந்து இன்றும் ஏராளமான பக்தர்கள் தனித் தனியாக கிரிவலம் சென்றனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொதுத் தரிசனம் மட்டுமின்றி, கட்டண தரிசன வரிசையிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பொதுத் தரிசனம் வழியில் சென்றவர்கள் நீண்ட நேரமானதால் குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News