திருவண்ணாமலை மாவட்டத்தில் 359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், இன்று ஒரேநாளில் 359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் இன்று ஒரேநாளில், 142 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா தொற்று பாதித்த 2175 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில், தொற்றால் இன்று ஒருவர் உயிரிழந்தார்.