ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் மாநில சமச்சீர் நிதி இணை ஆணையர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் இன்று சென்னை மாநில சமச்சீர் நிதி இணை ஆணையர் ஆய்வு

Update: 2021-10-07 16:01 GMT

திருவண்ணாமலை மாவட்டம்  ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் இன்று சென்னை மாநில சமச்சீர் நிதி இணை ஆணையர் சந்தோஷ் குமார் அவர்கள் மாநிலச்சமச்சீர் நிதியின் கீழ் கட்டப்பட்டு வரும், அத்திப்பட்டில் சாமை அரைவை குடோன், ஜமுனாமரத்தூரில் இயங்கிவரும் தேன், புளி சாமை,விற்பனைநிலையம் மற்றும் ஜவ்வாதுமலையில் இயங்கிவரும் லேம்ப் கூட்டுறவு சங்கம், ஆகியவற்றை  பார்வையிட்டார்.

ஜமுனாமரத்தூர்.நம்மியம்பட்டு, ஆகிய பகுதிகளில் கூட்டுறவுத்துறை. கீழ் இயங்கிவரும் நியாய விலைகடைகளுக்கு அரிசி.பருப்பு.சக்கரை மற்றும் அத்தியாவசப் பொருட்கள் சப்ளை செய்ய ஈச்சர்வேன் (Escher van) தேவைப்படுவதாக கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூறினார்கள். பின்பு நியாயவிலைக் கடைகளை பார்வையிட்டார்.

உடன் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சந்திரா ஒன்றியக்குழு பெருந்தலைவர் மதிஎம்.ஜீவாமூர்த்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ். சக்திவேல் . ஒன்றிய பொறியாளர் உடன் இருந்தார்கள்.

Tags:    

Similar News