பொன்னேரி அருகே நலிந்த பள்ளி மாணவர் களுக்கு இஸ்லாமிய நூலகம் சார்பில் நலத்திட்ட உதவி

பொன்னேரி அருகே நலிந்த பள்ளி மாணவர் களுக்கு இஸ்லாமிய நூலகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

Update: 2022-07-26 03:45 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மாதவரம் ஊராட்சியில் அடங்கிய முஸ்லிம் நகர் பகுதியில் வசித்துவரும் 150 பள்ளி மாணவர்களுக்கு சென்னை முகப்பேர் பகுதியில் இயங்கிவரும் இஸ்லாமிய நூலகம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு இஸ்லாமிய நூலகம் பொறுப்பாளர் நஸ்ருல்லா தலைமை வகித்தார்.முஸ்லீம் நகர் ஜமாத் தலைவர் கவுஸ்பாஷா முன்னிலை வகித்தார்.இதில் பள்ளி மாணவர்களுக்கு .நோட்டுபுத்தகம், ஸ்கூல்பேக், பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர் . நிகழ்ச்சியில் இஸ்லாமிய நூலகம் நிர்வாகி அஜிஸ்பாஷா,முஸ்லிம் நகர் நிர்வாகிகள் மஷேபூப், அம்ஜத்கான்.மற்றும் மன்சூர்.உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News