பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி: மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை

திருத்தணி அருகே 10 ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-05-10 05:33 GMT

திருத்தணி அருகே 10-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் மண்ணெண்ணெய் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மேல் பொதட்டூர்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி முரளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் குமாரி( வயது 14) உண்டு.குமாரி  பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது இதில் மாணவி குமாரி 500.க்கு187 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார்.

இவர் சமூக அறிவியல் பாடத்தில் 35-க்கு 10 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வி அடைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி குமாரி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் குடித்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவி குமாரி பரிதாபமாக உயிரை இழந்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News