குமுளி மலைப்பாதையில் பேரிடர் மீட்புக்குழு ஆய்வு

தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப்- குமுளி மலைப்பாதையில் பேரிடர் மீட்புக்குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

Update: 2021-07-22 09:15 GMT

குமுளி மலைப்பாதையில் பேரிடர் மீட்புக்குழுவினர்.

கேரள மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.  இந்த சீசனில் குமுளி, கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை தேவாரம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். 

இதனால், தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப் முதல் குமுளி வரை உள்ள மலைப்பகுதியில் தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லோயர் கேம்ப் குமுளி மலைப்பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு குழு இன்ஸ்பெக்டர் கணேஷ் பிரசாத், சப் இன்ஸ்பெக்டர் உமேஷ் கண்டி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

மண் சரிவு, வெள்ளப்பெருக்கு அபாயம், பாறைகள் உருண்டு விழும் அபாயம், மரங்கள் சாயும் அபாயம் உள்ள இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் என்ன மாதிரி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள் வேண்டும் என தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தனர்.

இந்த ஆய்வின் போது கூடலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், உத்தமபாளையம் தாசில்தார் உதய ராணி, வருவாய் துறை ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் முருகன் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News