ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை

namakkal news, namakkal news today- திருச்செங்கோடு அருகே கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2023-06-07 02:30 GMT

namakkal news, namakkal news today- வையப்பமலை அருகே, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட நந்தகுமார் அவரது தந்தை நடேசன், தாயார் சிந்தாமணி ஆகியோர் (கோப்பு படங்கள்)

namakkal news, namakkal news today- திருச்செங்கோடு தாலுக்கா, வையப்பமலை அருகே உள்ள நடுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (36) தச்சுத் தொழிலாளி . நேற்று காலை நீண்ட நேரமாகியும் நந்தக்குமார் மற்றும் உடனிருந்த பெற்றோர் நடேசன் (65), தாயார் சிந்தாமணி (52) ஆகியோர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிக்குள் சென்று பார்த்தபோது மூவரும் தனித்தனியாக கழுத்தில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சடலங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் தெரியவந்த விவரம்:

நந்தக்குமாருக்கு திருமணமாகாததால் பெற்றோருடன் வசித்து வந்தார். உடல்நிலை சரியில்லததால் நடேசனால் வேலைக்கு செல்ல இயலவில்லை. அதுபோல் தாயார் சிந்தமணியும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் தச்சுவேலை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவமானத்தைக் கொண்டு நந்தகுமார் குடும்பத்தை பராமரிப்பு செய்து வந்துள்ளார். இச்சூழலில் கடந்த 6 மாதங்களுக்கு முன் நந்தக்குமாருக்கு தச்சு வேலை செய்யும்போது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அன்றாட செலவுகளுக்கு கூட பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குடும்ப செலவுகளை சமாளிக்க அக்கம் பக்கத்தில் கடன் பெற்றுள்ளார். எனினும், வாங்கிய கடனை திருப்பி திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு நந்தகுமார் தள்ளப்பட்டுள்ளார். பணப்பிரச்சினையால், நந்தக்குமார் மற்றும் அவரது பெற்றோர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், 3 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து முடிவு செய்துள்ளனர். சம்பவத்தன்று இரவு, தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறோம். தங்களது இளைய மகன் புதைக்கப்பட்ட இடத்தில் தங்களது உடல்களையும் புதைக்க வேண்டும் எனவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு 3 பேரும் தூக்குப்போட்டு இறந்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர் தற்கொலை:

இறந்து போன நடேசன், சிந்தாமணி தம்பதிக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இறந்து போன நந்தகுமார் மூத்த மகன். 2வது மகன் ஜெயபிரகாஷ் கடந்த சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதுபோல் மகளும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். கடைசி மகன் கோபி என்பவர் மட்டும் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார் என்பது உள்ளிட்ட விவரங்களும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் மூவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News