உடல் நலம் பாதிப்பால் விரக்தி: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல் அருகே உடல்நலம் சரியில்லாததால், விரக்தியடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-05-24 02:15 GMT

பைல் படம்

நாமக்கல் அருகே உள்ள, எறையம்பட்டி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (55), கூலித்தொழிலாளி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இன்னும் இருவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் பழனிசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் விரக்தியடைந்த பழனிசாமி, வீட்டில் தனியாக இருந்தபோது, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர், தனது மகளுக்கு போன் செய்து விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த, அவரது மகள் வீட்டுக்கு வந்து, தந்தையை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News