நாமக்கல்லில் வரும் 20ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் வருகிற 20ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2022-05-17 07:15 GMT

பைல் படம்.

நாமக்கல்லில் வருகிற 20ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு, மே மாதத்திற்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 20ம் தேதி, காலை 10.30 மணிக்கு, கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News