கூட்டுறவு மேலாண்மை பயிற்சி: 22ம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவிப்பு

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-08 09:00 GMT

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கான விண்ணப்பம் (பைல் படம)

இதுகுறித்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு வரும் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வந்து சேர 22ம் தேதி மாலை 5.30 மணி கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் 10+2 கல்வி முறையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். 1.8.2022 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சிக்கான மொத்த கட்டணம் ரூ.18,850/-ஆகும்.


பயிற்சிக்கான விண்ணப்பத்தினை நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள, கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரில் வந்து ரூ.100/- ரொக்கமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கூரியர் அல்லது பதிவு தபால் மூலம் மட்டும் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News