செங்குந்தர் கல்லுாரியில் பி.எஸ்சி. நர்சிங் மாணவர்களுக்கு விழக்கேற்றும் விழா
செங்குந்தர் கல்லுாரியில் செவிலியர் மாணவர்களுக்கு விளக்கேற்றும் விழா, செய்முறை கருவிகள் பரிசாக வழங்கும் நிகழ்வு;
செங்குந்தர் செவிலியர் கல்லூரி விளக்கேற்றும் விழா: மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்பு
திருச்செங்கோடு செங்குந்தர் செவிலியர் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் முதலாமாண்டு மாணவர்களுக்கான விளக்கேற்றும் விழா கோலாகலமாக நடைபெற்றது. செங்குந்தர் கல்விக் குழுமத்தின் தலைவர் ஜான்சன் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் நீலாவதி வரவேற்புரை வழங்கினார். நிர்வாகத் தரப்பில் தாளாளர் பாலதண்டபாணி, பொருளாளர் தனசேகரன், வேலைவாய்ப்பு இயக்குனர் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கேர் 24 மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் கருப்பண்ணன் கௌரவ விருந்தினராகவும், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் கண்காணிப்பாளர் தனலட்சுமி தலைமை விருந்தினராகவும் கலந்து கொண்டு விளக்கேற்றும் நிகழ்வை துவக்கி வைத்தனர்.
"செவிலியர் பணி என்பது மனிதநேய சேவையின் உன்னதமான வடிவம். மருத்துவத்துறையில் செவிலியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது," என தலைமை விருந்தினர் தனலட்சுமி தனது சிறப்புரையில் தெரிவித்தார்.
விழாவின் சிறப்பு அம்சமாக, மாணவர்களுக்கு மருத்துவமனை பயிற்சியின்போது தேவைப்படும் அத்தியாவசிய செய்முறைக் கருவிகள் பரிசாக வழங்கப்பட்டன. இந்த உபகரணங்கள் மாணவர்களின் செய்முறைப் பயிற்சிக்கு பெரிதும் உதவும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.
"மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த கல்லூரி தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன ஆய்வகங்கள் மற்றும் திறமையான பேராசிரியர்களுடன் சிறந்த கல்வியை வழங்கி வருகிறோம்," என கல்லூரி தலைவர் ஜான்சன் நடராஜன் தெரிவித்தார்.
விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.