மதுரை அருகே நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி: கல்வி அமைச்சர் தொடக்கம்

Management Skills Development Training near Madurai

Update: 2022-06-22 09:00 GMT

மதுரை நாகமலைப் புதுக்கோட்டை, பில்லர் மையத்தில் நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மதுரையில் நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

மதுரை நாகமலைப் புதுக்கோட்டை, பில்லர் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அலுவலர்களுக்கான நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார், மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், சோழவந்தான் சட்டமன்ற வெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News