பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு

பாஜக வின் பி டீமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என மாணிக்கம் தாகூர் எம்பி குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2024-04-26 09:44 GMT

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தூகூர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான சட்டத்தில் தெரிந்தது மோடி அரசு தேர்தல் ஆணையத்தை தன்னுடைய கைப்பாவை போல செயல்பட விரும்புகிறது என்பது. இப்பொழுது அது தெளிவாக தெரிகிறது.

மத பிரிவினையை பற்றி பேசிய மோடிக்கு நோட்டீஸ் கொடுப்பதற்கு பயப்படுகின்ற ஒரு தேர்தல் ஆணையத்தை நாம் பார்க்க முடிகிறது. டி.என். சேஷன் போன்ற தனித்தன்மை உள்ள தேர்தல் ஆணையம் தன்னுடைய தனித்தன்மை இழந்து இன்று பிஜேபி யுடைய ஒரு பி  டீ ம் போல செயல்படுவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது இந்திய தேர்தல் வரலாற்றில் மிக அவமானகரமானது.

இந்திய தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட பாரபட்சமான முடிவுகளை எடுப்பது என்பது இந்திய தேர்தல் மீது மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையும் ஜனநாயகத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தாகும். மோடி அரசும் பாஜகவும் தேர்தல் ஆணையத்தை தன்னுடைய கட்டுப் பாட்டுக்குள் தனது கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

2 கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேலும்  5கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அடுத்தபடியாக இது நடக்கிறது எப்படி எல்லாம் பாஜகவிற்காக தேர்தல் ஆணையம் செயல்பட போகிறதோ என்று ஐயமும் ஏற்படுகிறது. மக்களுடைய பிரச்சினையை பார்த்து உச்ச நீதிமன்றம் தான் தலையிட முடியும். உச்சநீதிமன்றம் தான் தேர்தல் ஆணையத்தை சரியான நிலைக்கு கொண்டு வர வேண்டியது  உச்சநீதி மன்றத்தினுடைய பொறுப்பாகும்

நம்புவோம். நல்லது நடக்கும் நம்புவோம். தேர்தல் ஆணையத்தை பொருத்தமட்டில் மக்களுக்கு முன்னாலும், உச்சநீதி மன்றத்திற்கு முன்னாலும், இப்படிப்பட்ட பிரச்சனைகளிலிருந்து காக்கக்கூடியது நீதிமன்றங்களும் மற்ற அமைப்புகளுமே. இந்தியாவுடைய ஜனநாயகத்தை காப்பதற்கான கடைசி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஆதரவாக இல்லை. ஆனால், நடுநிலையோடு இருக்க வேண்டும் என்று சொல்கிறோமே ஒழிய எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறவில்லை. 

இந்த தேர்தல் ஜனநாயகத்தை காக்கின்ற தேர்தல். ஜனநாயகம் காப்பாற்றப்படுமா இந்திய அரசியல் சாசனம் காப்பற்றபடுமா என்பதை பொறுத்து இருக்கிறது. மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள். மக்கள் எடுக்கும் நல்ல முடிவை உண்மையான முடிவை அறிவிக்கும் தேர்தல் ஆணையம் என நம்புகிறோம். இந்த தேர்தலில் மக்கள் நல்ல முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறேன். மக்களுடைய நல்ல முடிவை அறிவிக்கின்ற அமைப்பாக தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News