மதுரை ஆவினில் கெட்டுபோன தயிர் பாக்கெட் பதுக்கல்: விசாரணை ?

Aavin Latest News -Hoarding spoiled yogurt packet in Madurai Aavin

Update: 2022-07-05 05:00 GMT

Aavin Latest News - மதுரை ஆவினில் தயார் செய்யப்பட்ட தயிர் கெட்டுப்போனதால்10,400 பாக்கெட்டுகளை ரகசிய அறையில் பதுக்கி வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மதுரை ஆவினில் நேற்றுமுன்தினம் தயார் செய்யப்பட்ட தயிர் கெட்டுப்போனதால் சப்ளை செய்யப்படவில்லை. வெளியே தெரிந்தால் சிக்கல் எனக்கருதி 10,400 பாக்கெட்டுகளை ரகசிய அறையில்பதுக்கி வைத்திருந்தது குறித்து  அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். தினமும் 100 தயிர் பாக்கெட் சப்ளை செய்துவந்த நிலையில், 20 நாட்களாக 10, 20 பாக்கெட்டுகளை மட்டும் சப்ளை செய்தனர். கேட்டதற்கு உற்பத்தி குறைவாக உள்ளது என்கின்றனர். தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆவின் ஊழியர்கள் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது. முழுமையாக விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும் கூறப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News