திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி

சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2022-07-26 08:30 GMT

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில்  நடைபெற்ற மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் விவேகா நுண்கலை மன்றம் சார்பில் மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விவேகா நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மாறன் வரவேற்றார்.கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரையாற்றினார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் கலைக்கூடல் நிகழ்ச்சியில் ,தேசபக்தி பாடல் மௌன மொழி நாடகம் மெல்லிசை பாடல் ஒயிலாட்டம் கீபோர்ட் இசை கானா பாடல் பறையாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் நடத்தினர்.

மாணவர்கள் ராஜா மற்றும் கமல் தேசபக்தி பாடல் பாடினர். மௌன மொழி நாடகத்தில் ராம்குமார், போதி சத்வவிநாயகம், தனுஷ், பெருமாள், ரத்தினவேல், கதிரவன், ஜீவா, மாணிக்கவாசகர் ஆனந்த் ஆகிய மாணவர்கள் பங்கு பெற்றனர். கேசவன், பீவின்குமர், பிரசன்னா ஆகியோர் ஒயிலாட்டம் ஆடினர். மாணிக்கவாசகர், கமல் மற்றும் ராஜா மெல்லிசை பாடல் பாடினர். பிரசன்னா,நீரஞ்சன்குமார் மற்றும் சுதீப் குமார் ஆகியோர் கீபோர்டு இசை வாசித்தனர். கமல் கானா பாடல் பாடினார். மணிகண்டபிரபு பல குரல் மொழி பேசினார். கார்த்திகேயன் அம்மா பாடல் பாடினார். தனுஷ், பிரவீன்குமார், சூர்யா, மதன்குமார், தங்கராம், சுதாகர் நாகேந்திரன் ஆகியோர் பறையாட்டம் ஆடினர். மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவர்  பெருமாள் நன்றி உரை வழங்கினார். மூன்றாம் ஆண்டு விலங்கியல் துறை மாணவர் ஸ்ரீதேவபாரதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News