மதுரை அருகே ஒ.பி.எஸ்.க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி
A poster put up in support of OPS near Madurai
மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் ஓபிசி க்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம், சமயநல்லூர் பகுதிகளில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். ஆதரவாக முக்குலத்தோர் அமைப்பு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளது. அந்த சுவரொட்டியில், ஓ.பி.எஸ். மீது, பொதுக்குழு நடந்தபோது, தண்ணீர் பாட்டிலைக் கொண்டு எறிந்தது என்பது, கீழ்த்தரமான செயல் என்றும், பொதுக்குழுவை, மீண்டும் கூட்டினால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும், இதை தமிழக முதல்வரும், காவல்துறை இயக்குனரும் தடுக்க வேண்டும் என்றும், மேலும், முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், முனியசாமி, ஜெயக்குமார் ஆகியோரைக் கண்டித்தும், சுவரொட்டிகள் சமயநல்லூர் பகுதியில், பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.