மதுரையில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு உடனடியாக பணியிட மாறுதல் அளிக்க வலியுறுத்தப்பட்டது

Update: 2021-09-23 11:56 GMT

மதுரையில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் மதுரை அஞ்சல்துறை தலைவர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முனிரத்தினம், மாவட்டச்செயலர் பாஸ்கரன், மாவட்டப் பொருளாளர் இஸ்மாயில், முதன்மை ஆலோசகர் ஜான் பிரிட்டோ ஆகியோர் தலைமையில் நடைபெற்ர ஆர்ப்பாட்டத்தில், புது வணிகத்திற்காக அடிக்கடி முகாம் நடத்துவதையும், கிராமிய அஞ்சல் ஊழியர்களை மிரட்டுவதையும் நிறுத்த வேண்டும். பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு உடனடியாக பணியிட மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. அஞ்சல் துறை ஊழியர்கள் திரளாக பங்கேற்று கண்ட முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News