அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2023-03-30 10:30 GMT

விபத்துக்குள்ளான லாரி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடகா மாநிலம் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக சென்றால் கர்நாடகாவிறக்கு மிக குறைந்த தூரம் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் ராமாபுரம் பகுதிக்கு டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருச்செங்கோடு சித்தன் நகர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார்.

அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் (வயது 43) என்பவர் உடனே இருந்தார். இதனையடுத்து லாரி மலைப்பாதையில் சென்று கொண்டு இருந்த பொழுது தட்டகரை என்னும் இடத்தில் செல்லும்போது எதிர்பாராத விதமாக லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் சாய்ந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பர்கூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் பட்டவர்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, மலைப்பகுதியில் உள்ள சாலைகள் அகலமாக விரிவுபடுத்தப்பட்டு இருப்பதாலும், வாகன ஓட்டிகள் வேகமாக சென்று வளைவுகளில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News