பவானி அருகே மயக்கமடைந்த பெண்ணை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை வழக்கு

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே மயக்கமடைந்த பெண் தொழிலாளியை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-05-04 02:30 GMT

கவின்.

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே மயக்கமடைந்த பெண் தொழிலாளியை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகேயுள்ள பூதப்பாடி சமத்துவபுரம் காலனியைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 39). கூலி தொழிலாளி. இவர் கடந்த மாதம் 12ம் தேதி பூதப்பாடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றபோது, அப்பகுதியில் உள்ள ஹாலோ பிளாக் கம்பெனி நுழைவாயிலில் திடீரென மயக்கமடைந்தார்.

இதைக்கண்ட ஹாலோ பிளாக் கம்பெனி உரிமையாளரும், அதிமுக பிரமுகருமான கவின், மயக்க நிலையில் இருந்த சித்ராவை தகாத வார்த்தையால் பேசி, அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதில், காயமடைந்த சித்ரா அந்தியூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சித்ரா அளித்த அளித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர், கூலித் தொழிலாளியை தாக்கிய கவின் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. இந்த நிலையில் எஸ்சி, எஸ்டி பிரிவு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள அதிமுக பிரமுகரான கவினை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News