மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சனிக்கிழமை (மே.4) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 39 கன அடியிலிருந்து 50 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2024-05-04 03:30 GMT

மேட்டூர் அணை.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சனிக்கிழமை (மே.4) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 39 கன அடியிலிருந்து 50 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.

தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 4வது நாளாக நேற்றும் 200 கன அடியாக நீடிக்கிறது.

இந்நிலையில்,மேட்டூர் அணைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 39 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 50 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,400 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 52.90 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 52.70 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 19.55 டிஎம்சியாக உள்ளது.

Tags:    

Similar News