பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம்

கணக்கம்பாளையத்தை சேர்ந்த பட்டதாரி பெண் காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

Update: 2022-06-02 04:00 GMT
தஞ்சமடைந்த காதல் ஜோடி.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள கணக்கம்பாளையம் பகவதி நகரை சேர்ந்தவர் சென்னியப்பன் மகள் சங்கீதா . பி.எஸ். பட்டதாரியான இவர் கவுந்தப்பாடி அருகே உள்ள பெரியகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் கோபுரகண்ணன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த காதல் விவகாரம் தொடர்பாக பெண்ணின் வீட்டிற்கு தெரியவே அந்தஸ்து காரணமாக ஏற்க மறுத்தனர். அதனால், வீட்டை விட்டு வெளியேறிய சங்கீதா காதலனுடன் நண்பர்கள் உதவியுடன் சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து, கவுந்தப்பாடி போலீசார் இருதரப்பின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சங்கீதாவின் பெற்றோர் அந்தஸ்து காரணமாக ஏற்க மறுக்கவே கோபுரகண்ணன் பெற்றோர் இவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டதால் காதல் ஜோடி கோபுரகண்ணன் வீட்டிற்கு சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News