ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்; 4 மருத்துவமனைக்கு சீல் வைக்க உத்தரவு

ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டையை பெற்ற சுதா மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைக்கு சீல் வைக்க அமைச்சர் சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-07-14 06:30 GMT
சுதா மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைக்கு சீல் வைக்க அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டு உள்ளார்.

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டையை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில், 4 மருத்துவமனைகளை மூட பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், சிறுமியை அவரது குடும்பத்தினரே நிர்ப்பந்தம் செய்து கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.


இதில், ஈரோடு  சுதா மருத்துவமனை,ஓசூர் விஜய் மருத்துவமனை,பெருந்துறை ராம்பிரசாத் மற்றும் சேலம் சுதா மருத்துவமனைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 4 மருத்துவமனைகளிலும் 15 நாட்களுக்குள் உள்நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். மேலும், உரிய சட்ட விதிமுறைகளின்படி, அந்த மருத்துவமனைகளை நிரந்தரமாக மூடுவதற்காக மருத்துவத் துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News