ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்கள் இதோ ! உங்களுக்காக..

Update: 2022-07-03 11:00 GMT

பைல் படம்.

ரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியருக்கான கல்வி தகுதித்தேர்வு தாள்-1-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியருக்கான கல்வி தகுதித்தேர்வு தாள்-2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை ஆசிரியர் பதவிக்கு முதுகலை ஆசிரியருக்கான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரம்:- 












விண்ணப்பங்கள் ஈரோடு கல்வி மாவட்டம் - deoerode2016@gmail.com, பவானி கல்வி மாவட்டம் - deobhavani6@gmail.com, கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டம் - deogobi@gmail.com, பெருந்துறை கல்வி மாவட்டம் - deoperundurai@gmail.com, சத்தியமங்கலம் கல்வி மாவட்டம் - deosathy@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம்.இவற்றை மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலரிடம் நாளை (திங்கட்கிழமை) முதல் 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும்.இந்த நியமனமானது முற்றிலும் தற்காலிகம் எனவும், மாறுதல் மற்றும் முறையான நியமனங்கள் மூலம் காலிப்பணியிடம் பூர்த்தி செய்யப்படும். பணி மற்றும் நடத்தை திருப்தி இல்லை எனில் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News