Begin typing your search above and press return to search.
விபத்து ஏற்படுத்தும் வேகத்தடை: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
விருதுநகரில், விபத்துகளை ஏற்படுத்தும் வேகத்தடைகளை சீரமைக்க வேண்டும் என்று, நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
விருதுநகரில், ரெயில் நிலையத்துக்கு செல்லும் பிரதான சாலையான ரெயில்வே பீடர் ரோடு, தந்தி மரத்தெரு சந்திப்பு அருகிலும், ராமமூர்த்தி ரோடு சந்திப்பு அருகிலும் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடைகள் அமைக்கப்படும்போது அதிகாரிகள் முறையாக கண்காணிக்காததால், அவை அதிக உயரமாக அமைக்கப்படுகிறது. வேகத்தடையில் ஏறி இறங்கும்போது, தடுமாறி கீழே விழும் நிலை தொடர்கிறது.
எனவே, விருதுநகர் நகராட்சி நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து, நகரின் பிரதான சாலையான ரெயில்வே பீடர் ரோட்டில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் வேகத்தடை பகுதிகளை சீரமைத்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாமல் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.