Begin typing your search above and press return to search.
ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் வேண்டுகோள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, மற்றும் 11 ஆம் தேதிகளில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக அமைச்சர் இன்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது அரசு சார்ந்த ஆய்வு என்பதால் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டும் கலந்து கொள்ளும் கூட்டம். எனவே கழகத் தோழர்கள் யாரும் நான் ஆய்வு செய்ய வரும் பகுதிகளில் என்னை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.