/* */

திருவண்ணாமலையில் காவலர் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் காவலர்களின் குறைதீர்க்கும் கூட்டம் எஸ்பி பவன்குமார் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் காவலர் குறைதீர் கூட்டம்
X

எஸ்பி பவன்குமாரிடம் கோரிக்கை மனு அளித்த காவலர். 

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், தலைமையில் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவலர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் பணி மாறுதல், காவலர் குடியிருப்பு வேண்டுதல், உடல் பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொள்ளுதல்,போன்ற கோரிக்கைகளை காவலர்கள் மனுவாக எழுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Oct 2021 5:46 AM GMT

Related News