/* */

ஆதரவற்ற ஆண் குழந்தைக்கு உரிமை கோருவோர் மாவட்ட நிர்வாகத்தை அணுக அழைப்பு

Tiruvannamalai Today Live News -வந்தவாசி அருகே பிறந்து 7 நாட்கள் ஆன ஆண் குழந்தைக்கு உரிமை கோருவோர் உரிய ஆதாரங்களுடன் வரலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

HIGHLIGHTS

ஆதரவற்ற ஆண் குழந்தைக்கு உரிமை கோருவோர் மாவட்ட நிர்வாகத்தை அணுக அழைப்பு
X

பைல் படம்.

Tiruvannamalai Today Live News -வந்தவாசி அருகே பிறந்து 7 நாள்களே ஆன நிலையில் கேட்பாரற்று விடப்பட்டிருந்த ஆண் குழந்தையை உரிமை கோருவோா் உரிய ஆதாரங்களுடன் வரலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், தூசி கிராமம், வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் உள்ள விநாயகா் கோயிலில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பிறந்து 7 நாள்களே ஆன ஆண் குழந்தை ஆதரவின்றி இருந்தது.

இந்தக் குழந்தையை மீட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் தத்து நிறுவனத்தில் சோத்து பராமரித்து வருகின்றனா். 18.04.2022-ம் தேதி பிறந்த அருணேஷ் என்ற இந்தக் குழந்தையை உரிமை கோருவோா் உரிய ஆதாரங்களுடன் 7 நாள்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வட்டாட்சியா் அலுவலக வளாகம்,திருவண்ணாமலை என்ற முகவரியில் அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தெரிவித்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Sep 2022 11:02 AM GMT

Related News