தெலுங்கு வருட பிறப்பையொட்டி நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு
தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு தெலுங்கு பேசும் மக்கள் நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.
HIGHLIGHTS
நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு நாயக்கர் மன்னர்கள் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் திருகோவிலை புனரமைப்பு செய்த மன்னர்களான நாகம நாயக்கர், விஸ்வநாத நாயக்கர், கிருஷ்ணப்ப நாயக்கர், திருமலைநாயக்கர் உள்ளிட்ட 7 தெலுங்கு மன்னர்களில் சிலைகள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ளது. தெலுங்கு வருட பிறப்பினை முன்னிட்டு தெலுங்கு பேசும் மக்கள் நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக தெலுங்கு மன்னர்களின் சிலைக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து நாயக்க மன்னர்களின் சிலைக்கு புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு பூ, தேங்காய், பழங்கள் படைக்கப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான தெலுங்கு மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.