மே தினத்தை முன்னிட்டு சிவசேனா கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நெல்லையில் சிவசேனா கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
HIGHLIGHTS
நெல்லை மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் மே தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடையும், பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.
நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள மாவட்ட சிவசேனா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தென் மண்டல தலைவர்கள் பிகேபி ராஜபாண்டியன், சூரியகாந் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் வடிவேல் முருகன், மகளிரணி செயலாளர் முருகம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன், 6 ஆவது வட்ட தலைவர் பச்சையப்பன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் முத்துப்பாண்டியன், சுடலைமணி, முருகன், சங்கரலிங்கம், சின்ன குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.