நோன்பு பெருநாள் கொண்டாட உணவு பொருட்கள் பெட்டகம்.
எங்கள் மகிழ்ச்சி உங்களது மகிழ்ச்சி
HIGHLIGHTS
நெல்லை மேலப்பாளையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு எங்கள் மகிழ்ச்சி உங்களது மகிழ்ச்சி எனும் நோக்கில் நோன்பு பெருநாள் கொண்டாட உணவு பொருட்கள் பெட்டகம் வழங்கப்பட்டது
மேலப்பாளையம் விரிவாக்க பகுதியில் அமைந்துள்ள கரீம் நகர் பகுதி மக்களுக்கு இர்ஃபானுல் ஹுதா டிரஸ்ட் சார்பாக வருடம் தோறும் ஏழை மக்கள் சந்தோஷமாக நோன்பு பெருநாள் கொண்டாட உணவு பொருட்கள் வழங்குவது வழக்கம்.
அதனடிப்படையில் இந்த வருடத்திற்கானதை கொரோனா காலகட்டத்தில் தற்போது கஷ்டப்படும் 200க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு 700 ரூபாய் மதிப்புள்ள 22 வகையான அவர்களது வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் (அரிசி,பருப்பு,நெய்,என்னய்,சீனி, தேயிலை, மசாலா பொடி) உள்ளடங்கிய 200 ரமலான் அன்பளிப்பு பெட்டகம் வழங்கப்பட்டது.
கரீம்நகர் மஸ்ஜிதுல் ஹுதாவில் நடைபெற்ற நிகழ்வில் நிர்வாகிகள் கே.எஸ்.சாகுல்ஹமீது உஸ்மானி, ஜாபர் ஆலிம்,எம்.எஸ்.ஜைய்னுல் ஆப்தீன், முஸ்தபா, ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்