/* */

விமான நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

விமான நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
X

தூத்துக்குடி விமான நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் நடைபெற்றது.

நாடு முழுவதும் நேற்று 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் நேற்று போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. முகாமினை தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் இன்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இந்திய விமான நிலைய ஆணைய குழுமமும் தூத்துக்குடி பொது சுகாதார துறையும் இணைந்து இம் முகாமை நடத்தியது. முகாமிற்கான ஏற்பாடுகளை விமான நிலைய மேலாளர் ஜெயராமன் செய்திருந்தார்.

Updated On: 1 Feb 2021 6:52 AM GMT

Related News