/* */

திருவாரூர் அருகே மோசமான சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம்

திருவாரூர் அருகே 18 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் மோகமான சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருவாரூர் அருகே மோசமான சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம்
X
திருவாரூர் அருகே மோசமான சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் ஒன்றியம் மாங்குடி ஊராட்சிக்குட்பட்ட மூல சாத்தங்குடி கிராமம் 18 ஆண்டுகளாக சரியான சாலை வசதி இல்லாமல் உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள சாலையால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாகவும்,அவசர தேவைகளுக்காக வெளியில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

மருத்துவ அவசரத்திற்காக ஆம்புலன்ஸ் அழைத்தால் கூட கிராமத்திற்குள் ஆம்புலன்ஸ் வராமல் வெளிப்புறச் சாலையிலேயே ஆம்புலன்ஸ் நின்று விடுவதாகவும் மிகவும் சிரமப்பட்டு இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தற்பொழுது மழை காலம் வரத்தொடங்கியுள்ள நிலையில் சாலை மேலும் மோசமடைந்து உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் கிராம மக்கள் வேறு வழியின்றி இன்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் அரசு காலம் தாழ்த்தினால் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்கரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 14 Oct 2021 10:27 AM GMT

Related News

Latest News

  1. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  6. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  10. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்