/* */

திருவாரூர் மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருவாரூர்  மாவட்டத்தில்  குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது
X

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட வினோத்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் தொடர்ந்து சாராயம் விற்பனைை செய்துவந்த கொக்கலாடி கிராமத்தை சேர்ந்த ரத்தினகுமார் (34),மணலி கிராமத்தை சேர்ந்த வினோத் (33), மற்றும் திருவாரூர் பகுதியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட கொரடாச்சேரி அருகே வெண்ணவாசல் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (28 )உள்ளிட்ட 3 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சிறப்பு தனிப்படை அமைத்து கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.




இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின் பேரில் மூன்று பேரும் நேற்று குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பிறப்பித்து உள்ளார். மேலும் இதுபோன்று மாவட்டத்தில் யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீதும்,குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை செய்துள்ளார்.


Updated On: 16 Nov 2021 8:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு