திருவாரூர் மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் தொடர்ந்து சாராயம் விற்பனைை செய்துவந்த கொக்கலாடி கிராமத்தை சேர்ந்த ரத்தினகுமார் (34),மணலி கிராமத்தை சேர்ந்த வினோத் (33), மற்றும் திருவாரூர் பகுதியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட கொரடாச்சேரி அருகே வெண்ணவாசல் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (28 )உள்ளிட்ட 3 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சிறப்பு தனிப்படை அமைத்து கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின் பேரில் மூன்று பேரும் நேற்று குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பிறப்பித்து உள்ளார். மேலும் இதுபோன்று மாவட்டத்தில் யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீதும்,குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை செய்துள்ளார்.