/* */

தஞ்சையில் வணிகர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்

கொரோனா 3 வது அலை வந்தாலும் சிகிச்சை அளித்திட கூடுதலாக 1000 புதிய படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் தயாராக உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்.

HIGHLIGHTS

தஞ்சையில் வணிகர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்
X

தஞ்சையில் சிறப்பு தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார்.

தஞ்சையில் வணிகர்களுக்கான சிறப்பு தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தஞ்சை மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. பொது மக்களுடன் அதிகம் தொடர்புடன் உள்ள வணிகர்களுக்கென்று சிறப்பு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை துவங்கியுள்ளோம். நேற்று 16 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. மாவட்டம் முழுவதிலும், இதுவரை 5 லட்சத்தி 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதல் கட்ட தடுப்பூசி 4 லட்சத்தி 30 ஆயிரம் பேருக்கும், இரண்டாம் கட்ட தடுப்பூசி 85 ஆயிரம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. 3 வது அலை வந்தாலும் சிகிச்சை அளித்திட முன்னேற்பாடாக 1000 புதிய படுக்கைகள் தயாராக வைத்துள்ளோம். ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.


Updated On: 21 July 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  3. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  4. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  5. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  7. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  8. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  9. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  10. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!