/* */

காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்: 3பேர் தப்பி ஓட்டம், ஒருவர் பிடிபட்டார்

தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல். 3 பேர் தப்பி ஓட்டம், ஒருவரை கல்லணை பொதுமக்கள் துணையுடன் தோகூர் போலீசார் விரட்டிப்பிடித்தனர்.

HIGHLIGHTS

காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்: 3பேர் தப்பி ஓட்டம், ஒருவர் பிடிபட்டார்
X

திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல்டவுன் சீப் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் நரேஷ்ராஜு (28)

தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் போலீசார், கல்லணை பாலத்தில் நேற்று இரவு தோகூர் சப் இன்ஸ்பெக்டர்கள் அய்யா பிள்ளை, வேல்முருகன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக கோவிலடியிருந்து கல்லணை புது பாலம் ஏறும் பகுதியில் ஒரு ஸ்கூட்டியில் 4 பேர் வந்துள்ளனர்.

அவர்களை தோகூர் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை செய்தப்போது, அவர்கள் போதையில் இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் 4 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தப்போது,

அவர்கள் திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல்டவுன் சீப் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் நரேஷ்ராஜு (28), துவாக்குடி அண்ணாவளைவு பகுதியை சேர்ந்த ஜான் போஸ்கோ மகன் ரூபன்(21), துவாக்குடி அண்ணா வளைவு இந்திரா தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் வினீத் (21), துவாக்குடி அண்ணா வளைவை சேர்ந்த பாண்டியன் மகன் சாந்தகுமார்(21)என்பது தெரியவந்தது. இவர்களால் 4 பேரும் லால்குடி பகுதிக்குச் சென்று விட்டு வந்ததாகவும் கூறி உள்ளனர்.

இந்த நிலையில் போலீசார் சம்பந்தப்பட்ட செல்போனைவாங்கி பார்த்துக்கொண்டிருந்தபோது மொபட்டில் வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து வந்து அய்யாபிள்ளை தாக்கியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக மற்ற காவலர்கள் உடனடியாக கதவை இழுத்து சாத்தியுள்ளனர். நான்கு பேரும் தப்பி ஓடி உள்ளனர். அதிர்ஸ்டவசமாக அய்யா பிள்ளை உயிர்தப்பினார். இந்த நிலையில் தப்பி ஓடிய 4 பேரை தோகூர் போலீசார் கல்லணை பொது மக்கள் உதவியுடன் நரேஷ்ராஜ்வை காவல்துறையினர் பிடித்தனர். இவர்களிடம் இருந்தது ஆடு வெட்டும் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 5 Dec 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு