காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்: 3பேர் தப்பி ஓட்டம், ஒருவர் பிடிபட்டார்
தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல். 3 பேர் தப்பி ஓட்டம், ஒருவரை கல்லணை பொதுமக்கள் துணையுடன் தோகூர் போலீசார் விரட்டிப்பிடித்தனர்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் போலீசார், கல்லணை பாலத்தில் நேற்று இரவு தோகூர் சப் இன்ஸ்பெக்டர்கள் அய்யா பிள்ளை, வேல்முருகன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக கோவிலடியிருந்து கல்லணை புது பாலம் ஏறும் பகுதியில் ஒரு ஸ்கூட்டியில் 4 பேர் வந்துள்ளனர்.
அவர்களை தோகூர் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை செய்தப்போது, அவர்கள் போதையில் இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் 4 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தப்போது,
அவர்கள் திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல்டவுன் சீப் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் நரேஷ்ராஜு (28), துவாக்குடி அண்ணாவளைவு பகுதியை சேர்ந்த ஜான் போஸ்கோ மகன் ரூபன்(21), துவாக்குடி அண்ணா வளைவு இந்திரா தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் வினீத் (21), துவாக்குடி அண்ணா வளைவை சேர்ந்த பாண்டியன் மகன் சாந்தகுமார்(21)என்பது தெரியவந்தது. இவர்களால் 4 பேரும் லால்குடி பகுதிக்குச் சென்று விட்டு வந்ததாகவும் கூறி உள்ளனர்.
இந்த நிலையில் போலீசார் சம்பந்தப்பட்ட செல்போனைவாங்கி பார்த்துக்கொண்டிருந்தபோது மொபட்டில் வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து வந்து அய்யாபிள்ளை தாக்கியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக மற்ற காவலர்கள் உடனடியாக கதவை இழுத்து சாத்தியுள்ளனர். நான்கு பேரும் தப்பி ஓடி உள்ளனர். அதிர்ஸ்டவசமாக அய்யா பிள்ளை உயிர்தப்பினார். இந்த நிலையில் தப்பி ஓடிய 4 பேரை தோகூர் போலீசார் கல்லணை பொது மக்கள் உதவியுடன் நரேஷ்ராஜ்வை காவல்துறையினர் பிடித்தனர். இவர்களிடம் இருந்தது ஆடு வெட்டும் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.