/* */

தஞ்சாவூர் அருகே 100 கிலோ கஞ்சா பறிமுதல் - நான்கு பேர் கைது

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல். வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் கைது.

HIGHLIGHTS

தஞ்சாவூர் அருகே 100 கிலோ கஞ்சா பறிமுதல் - நான்கு பேர் கைது
X

கோப்பு படம் (கைது)

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை காவல்துறையின் உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் தஞ்சாவூர் அருகே டவுன் கரம்பை பகுதியில் ஒரு வீட்டில் சோதனை செய்த போது, வீட்டில் 100 கிலோ கஞ்சா இருப்பதை காவல்துறையினர் கண்டு பிடித்தனர். இதனையடுத்து பதுக்கி வைத்து கஞ்சாவை பறிமுதல் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து தஞ்சைக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த தீபக் ரஞ்சன், திருச்சியைச் சேர்ந்த கௌதம், தஞ்சை சேர்ந்த குமார் மற்றும் பூமிநாதன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 Dec 2021 2:30 PM GMT

Related News