மண்டேலா திரைப்படத்தை தடை செய்ய கோரிக்கை
தென்காசி மாவட்ட மருத்துவர் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் பண்டார சிவன், மாவட்ட பொருளாளர் முத்தையா, நகரச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தமிழகத்தில் மருத்துவ சமூக மக்கள் முடிதிருத்தும் தொழிலாளர்கள், 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் மண்டேலா என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளியை எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அந்த அளவுக்கு இழிவாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.எனவே மருத்துவ முடிதிருத்தும் தொழிலாளர்களை அவமானப்படுத்தும் இந்தத் திரைப்படத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். இதை ஒளிபரப்பு தனியார் தொலைக்காட்சி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் . எங்கள் மருத்துவ சமூக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.