/* */

தென்காசி அருகே விநாயகர் சுடலைமாடன் பேச்சியம்மாள் கோவில் கும்பாபிஷேகம்

தென்காசி அருகே விநாயகர் சுடலைமாடன் பேச்சியம்மாள் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி அருகே விநாயகர் சுடலைமாடன் பேச்சியம்மாள் கோவில் கும்பாபிஷேகம்
X

தென்காசி அருகே சுடலை மாடன் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தென்காசி அருகே உள்ள மேலப்புலியூர் பகுதியில் திருவள்ளுவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ குறள் விநாயகர் வடக்குவாய் செல்வி அம்மன் சுடலைமாடன் சுவாமி ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 6:00 மணிக்கு தீர்த்த நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தினந்தோறும் கோயிலில் சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடத்தப்பட்டன. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 29 Aug 2022 8:04 AM GMT

Related News