/* */

தென்காசி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி குறைதீர்க்கும் முகாம்

தென்காசி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி, குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி குறைதீர்க்கும் முகாம்
X

தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும், வட்ட அளவில், இரண்டாவது சனிக்கிழமையன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, 14.05.2022 தேதியன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலங்களில் பொது விநியோகத் திட்டம் குறித்த குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது.

பொதுவிநியோகத்திட்ட குறைதீர்வு முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை /நகலட்டை கோரும் மனுக்கள் பதிவு செய்தல் மற்றும் கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் தெரிவிக்கலாம்.

குறைதீர்வு முகாமில் கலந்து கொள்பவர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். குறைதீர்வு முகாமில் அந்தந்த வட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Updated On: 11 May 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!